உங்கள் வலைதளத்தை பிரபலப்படுத்த பதிவுகளை இணைக்க வேண்டிய தமிழ் திரட்டிகள்

உங்கள் வலைதளத்தை பிரபலப்படுத்த பதிவுகளை இணைக்க வேண்டிய தமிழ் திரட்டிகள் உங்கள் வலைதளத்திற்கு வருகைதருபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கீழ்கண்ட திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம். ஏனென்றால், நீங்கள் பதிவுகளை இணைக்கும் பிரபலமான திரட்டி கூட சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

தமிழ் திரட்டிகள்

சிமெண்ட் விலை குறைப்பு: முதல்வருடன் ஆலை அதிபர்கள் ஆலோசனை!

Vote this article
Up (0)
Down (100)
Ads by Google
PMI Ash Technologies www.pmiash.com
The Leader in Fly Ash Technologies Why Landfill when you can Recycle
சென்னை: சிமெண்ட் விலையைக் குறைக்குமாறு சிமெண்ட் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கேட்டுக் கொண்டார் முதல்வர் கருணாநிதி [^] .

இதுகுறித்து இன்று தலைமைச் செயலகத்தில் சிமெண்ட் ஆலை அதிபர்களுடன் ஆலோசனையும் நடத்தினார் முதல்வர் கருணாநிதி.

இக்கூட்டத்தில் அரசின் சார்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் எஸ். மாலதி ஆகியோரும், சிமெண்ட் உற்பத்தியாளர்களின் சார்பாக மெட்ராஸ் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா, செட்டிநாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் [^] எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.என். பிரபாகர், அந்நிறுவன இயக்குநர் எம். ரகுபதி, இண்டியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன், பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் ரெட்டி, துணை பொது மேலாளர் நாகேஸ்வர ராவ், ஜுவாரி சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் குட்டி, கிராசிம் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இணை செயல் தலைவர் எஸ்.சி. பட்டீல், ஏ.சி.சி. சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் (வணிகம்) விசுவநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பொது மக்களின் நலன் கருதி சிமெண்ட் விலையை உடனடியாகக் குறைக்க சிமெண்ட் உற்பத்தியாளர்கள் நடவடிக்கை [^] மேற்கொள்ள வேண்டுமென்று அரசின் சார்பாகக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்பிரச்சினை சம்பந்தமாக தாங்கள் ஒன்றுகூடி, விவாதித்து, நல்ல முடிவை அரசுக்குத் தெரிவிப்பதாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் உறுதியளித்துச் சென்றனர்

வியாபாரம் - பொருளின் தரம் - விற்பனை தந்திரம் எது முக்கியம்.

நீங்கள் பயன்படுத்தும் ஒரு பொருளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் அது தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்களா? அல்லது அதிகம் பிரபலமான பொருளை சற்று தரத்தில் குறைவாக இருந்தாலும் வாங்குவீர்களா?.. இதற்க்கு உங்களிடம் இரண்டு விதமான பதில்கள் இருக்கும். இங்கு பொதுவாகவே அது எத்துனை தரமாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் இல்லையென்றால் அதன் விற்பனை நினைத்த அளவிற்கு இருக்காது என்பதே உண்மை.

இப்ப இந்த விளம்பரம் எவற்றுக்கெல்லாம் தேவை என்றால் அது எல்லாவற்றுக்கும் தேவை என்பேன். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு வலைப்பக்கம் வைத்திருக்கிறீர்கள் அதில் சிறந்த தகவல்களையோ அல்லது சிறந்த இல்லகியத்தையோ எழுதுகிறீர்கள் ஆனால் உங்களை வாசிப்பவர் என்று பார்த்தால் அது ஒரு இருபது பேரில் இருந்து ஐம்பது பேருக்குள் மட்டுமே இருப்பார்கள். இதுவும் தமிழ்மணம், இன்லி போன்ற திரட்டிகளில் நீங்கள் இணைத்தால் மட்டுமே சாத்தியம். இப்போது உங்களுக்கு ஏன் மொக்கை பதிவுகள் ஓட்டு வாங்குகின்றன என்பதை விளக்க தேவையில்லை என நினைக்கிறேன். அது உங்களுக்கே புரியும். காரணம் இது பற்றி சமீபத்தில் சிபி.செந்தில்குமார் வரை சொல்லியிருக்கிறார்கள்.

இத்தாலியில் இரண்டு புகழ் பெற்ற சாக்லேட்டுகள் இருக்கின்றன. அதில் ஒன்று மிகுந்த தரமாக இருக்கும் ஆனால் அதன் பேக்கிங் அவ்வளவு நன்றாக இருக்காது. இன்னொன்று தரம் குறைவாக இருக்கும் ஆனால் அதற்கு பேக்கிங் அசத்தலாக இருக்கும். இரண்டுமே நன்றாக போகிறது சொல்லப்போனால் இரண்டுமே ஒரே விலை. இப்ப தரமான சாக்லேட்டுக்கு விளம்பரம் மற்றும் பேக்கிங் நன்றாக செய்தால் விலை அதிகம் இருந்தாலும் இதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். சென்னை சரவணபவன் ஓட்டலில் நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அவர்கள் விரைவு உணவகம், அமர்ந்து சாப்பிடும் உணவகம், பணக்காரர்களுக்காக அதிக விலையுடன் கூடிய ஏசி உணவகம் என மூன்று விதமாக வைத்திருக்கிறார்கள். இதில் விரைவு உணவகத்தில் விற்கும் உணவும், அமர்ந்து சாப்பிடும் உணவகத்தில் விற்கும் உணவும் ஒரே மாதிரியான தயாரிப்பு ஆனால் விரைவு உணவகத்தில் விலை குறைவாக இருக்கும். காரணம் எல்லா விதமான வாடிக்கையாளர்களையும் அவர்கள் விட்டுவிட விரும்பவில்லை.

தினகரன் பத்திரிக்கை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 2005 ஆண்டு கலாநிதி மாறன் தினகரன் பத்திரிக்கை வாங்குவதற்கு முன் தி.மு.க காரர்கள் மட்டுமே வாங்கிப்படித்த பத்திரிக்கை அது. அதன்பிறகு ஒரு ரூபாய்க்கு அதனை விற்று பரபரப்பாக்கி இன்றைக்கு தமிழின் No.1 நாளிதழ் அதுவாகவே மாறிவிட்டது. இன்றைக்கு மூன்று ரூபாய் ஆக மாறிவிட்டது. ஆனால் இனி அதனை படிப்பவர்கள் தொடர்ந்து படிக்கவே செய்வார்கள். தனி நபர் வலைப்பக்கம் என்றாலும் அல்லது மிகப்பெரிய நிறுவனம் என்றாலும் உங்களை சரியாக கொண்டு சேர்க்கும் உத்தி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களால் வெற்றிபெறவே முடியாது. இன்றைக்கு உங்கள் குழந்தைகள் தொலைகாட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்கித்தர அடம்பிடிக்க காரணம் அந்த பொருட்களை விளம்பர படுத்த பெரியவர்கள் சிந்தித்ததுதான்.

இப்ப தரம் இருக்கு, விளம்பரம் செய்து பெரிய அளவில் விற்பனை ஆகிறது, உங்கள் விளம்பரங்களை குறைக்க வேண்டுமா என்றால், உங்களுக்கு ஒரு போட்டியாளர் வராதவரைக்கும் குறைக்கலாம். ஆனால் போட்டியாளர் வந்துவிட்டால் மீண்டும் முன்னைவிட பலமாக விளம்பரம் செய்ய வேண்டியிருக்கும். ஹமாம் சோப் அந்த உத்தியைதான் கையாள்கிறது. இன்றைக்கு இந்துஸ்தான் லீவரின் பொருட்கள்தான் நாம் அன்றாடம் பயன்படுத்துவதில் பெருமளவு இருக்கிறது. எத்தனை பேருக்கு ஒரே நிறுவன பொருட்களைத்தான் பயன்படுத்துகிறோம் என்கிற விவரம் தெரியும். நான் பொதுவாகவே சோப் மற்றும் அன்றாட உபயோக வாங்கும்போது எது இலவசங்களுடன் அல்லது தள்ளுபடி விலையில் வருகிறதோ அதையே வாங்குவேன். காரணம் விளம்பரத்திற்காக விலையில் சமரசம் செய்துகொள்ளும் தருணம் அது. நாம்தான் அதனை புத்திசாலிதனமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காதி கிராப்டில் கிடைக்கும் நிறைய பொருட்கள் மிக தரமானவை ஆனால் பெரும்பான்மையாக விவரமான ஒருசிலரே பயன்படுத்துகின்றனர். இங்கு விளம்பரம் கிடையாது. தரமும் இருக்கும் ஆனால் சந்தை வாய்ப்பு வெகு சொற்பமே.

கோகோ கோலா, பெப்சி பற்றி பேசுவோம். டாஸ்மாக் பானங்களை குடிப்பவர்களுக்கு அறிவுரை கூறும் நண்பர்கள் இதனை பற்றி அறியாமல் இருப்பது ஆச்சர்யமே. முழுக்க உடலுக்கு கேடு விளைவிக்கும் பானங்கள் இவை . இதனைத்தான் நாம் நம் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுக்கிறோம். ஒரு லிட்டர் பெப்சியோ, கோக்கோ, இன்னபிற வஸ்துகளோ, அது தயாரிக்க ஆகும் செலவு வெகு சொற்பமே. ஆனால் விளம்பரம் செய்தது மக்களை அடிமையாக்கி இன்று உலகம் முழுதும் அது விற்பனையில் கொடிக்கட்டி பறக்கிறது. குடிக்கும் பாலில் அது கேட்டுப் போகாமல் இருக்க யூரியா கலக்கிறார்கள். ஹைட்ரஜன் பெராக்சைடு அதில் இருக்கும் அழுக்கை நீக்க பயன்படுத்துகிறார்கள். பாலுக்கு பற்றாக் குறை கடுமையாக இருக்கிறது, ஆனால் அப்படி பற்றாக்குறை இருக்கும்போதே நிறைய நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. காரணம் சொல்லவேண்டியதில்லை.

"சரக்கு முறுக்கா இருந்தா பத்தாது; செட்டியாரும் முறுக்கா இருக்கணும்"
என்கிற சொலவடை தமிழில் இருக்கிறது..

http://krpsenthil.blogspot.com/2010/09/blog-post_6120.html

கடல் நீரோட்டங்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்தல்

தலை மன்னார் பகுதிகள் பாக்கு நீரிணையின் ஒடுக்கமான பகுதிக்குள் வருகின்றன. இந்த பாக்கு நீரிணையானது வட கிழக்காக வங்காள விரிகுடாவினுள் விரிகின்றது. தென்மேற்காக இந்து சமுத்திரத்தினுள் திறக்கின்றது. இவ்விரு திறந்த நீர்பரப்புகளும் நமது தீவுப்பகுதிகளை அண்டி ஒடுங்குகின்றன. இது ஒரு புனலின் ஒடுக்கமான பகுதிக்கு ஒப்பிடலாம்.


இவ்விரு திற‌ந்த‌ பாரிய‌ நீர் ப‌ர‌ப்புக‌ளை இணைத்து ந‌ம‌து தீவுப் ப‌குதிகளிற்கூடாக கடல் நீரோட்டம் ஓடுகிறது.

இந்த‌ சமுத்திர நீரோட்டமானது ஆண்டு முழுவதும் ஓடுகின்றது. இந்த நீரோட்டங்களால் கடத்தப்படும் சக்தி அளவற்றது. சேது சமுத்திர திட்டம் வெற்றி பெற்றால் இந்த நீரோட்டத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும்.

ஆறுக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி மின் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டுவ‌து அறிந்த‌தே. இந்த‌ ச‌முத்திர‌ நீரோட்ட‌ங்க‌ள் இப்ப‌டியான‌ ஆறுக‌ள் ப‌ல‌வ‌ற்றிற்கு ச‌மான‌மான‌வையாகும். இதிலிருந்தே இவ‌ற்றின் மின் உற்ப‌த்தி வ‌லு என்ன‌ என்று க‌ணித்துக் கொள்ள‌லாம்.

தீவுப்பகுதிகளிற்கிடையேயான ஒடுங்கிய கடற்பரப்புகள் இந்த இயக்கச் சக்தியை மின் சக்தியாக மாற்றக் கூடிய விசிறிகளைப் (Turbines) பொருத்தகூடிய தளங்களை வளங்கும்.

இந்த திட்டம் பற்றி போதுமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நமது தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செயக்கூடிய வளம் எம்மிடம் உள்ளது.


க‌ட‌லில் பாவிக்க‌க்கூடிய‌ சில Turbine களை கீழுள்ள‌ ப‌ட‌ங்க‌ளில் காண‌லாம்.









THANKS TO http://www.yarl.com/forum3/index.php?showtopic=48071

உலகில் கிடைக்கும் மொத்த நீரில் 97.5 சதவீதம் கடல் நீர்தான். மீதி உள்ள 2.5 சதவீதம் நீரிலும் 70 சதவீதம் வட-தென் துருவங்களில் உறை நிலையில் உள்ளது. 30 சத வீதம் மட்டுமே உலகெங்கும் உள்ள மக்களுக்குப் பயன்படும் வகையில் நீர்நிலைகளிலும் நிலத்தடி நீராகவும் உள்ளது. இந்த அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பது நமது உடனடி கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கியமான அம்சம்.





READ MORE...


தமிழக அரசு நிறுவனம் விற்ற பதினாறு டன் மூலிகை வயாகரா


தமிழக அரசின் டாம்கோல் நிறுவனம் புதிதாக மூலிகை வயகரா ஒன்றை வெளியிட்டுள்ளது. லபூப் சகீர் என்பது இதன் பெயர். அல்வாவைப் போன்ற ரொம்ப டேஸ்டா இருக்குதாங்க. (அட, நிஜமாவே நான் இன்னும் சாப்பிட்டு பாக்கலைங்க…). வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே ஸ்டாக்கும் தீர்ந்து, மூலப் பொருட்களும் தீர்ந்து போயிடுச்சாம். அவ்வளவு டிமாண்டு.


முதலில் ஏப்ரலில் கடைகளில் வந்தபோது அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் வாங்கியவர்கள் ‘அனுபவத்தில்’ அசந்து போய், விஷயம் பரவ ஆரம்பித்தது. பெரிதாக விளம்பரம் இல்லாமலேயே, இரண்டே மாதங்களில் பதினாறு டன் லபூப் சகீர் விற்று தீர்ந்து விட்டதாம். இப்போது டாம்கோல் நிறுவனத்தில் இதற்காகவே ஆட்கள் ராப்பகலாக லபூப் சகீர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

இது ஒரு யுனானி மருந்து. விலை மிகவும் குறைவு – முப்பது ரூபாய் தான் என்று சொல்கிறார்கள். இதில் பாதாம், பிஸ்தா, மற்றும் உலர வைக்கப் பட்ட பழங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிரதாம். இப்போது இதன் ‘மகிமை’ வெளிநாடுகளில் எல்லாம் பரவ ஆரம்பித்து விட்டது.

இது குறித்து சட்டசபையில் கூட சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ் செய்தி:

சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது லபூப் சகீர் குறித்தும் சுவாரஸ்ய விவாதம் நடந்தது. அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் எழுந்து, லபூப் சகீரை எப்படி நம்புவது, அது உண்மையிலேயே பலன் தருமா என்று கேட்டபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், தேவைப்படுபவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளோமே என்று பதிலளிக்க வெடிச் சிரிப்பு கிளம்பியது.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் எழுந்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மருந்தைக் கொடுத்துள்ளோம். உறுப்பினர் ஜெயக்குமாருக்கும் தந்துள்ளோம்.

அவரை இதை பயன்படுத்தி சோதித்துப் பார்த்து விட்டு முடிவைச் சொல்லட்டும். ஒரு வாரத்திற்குப் பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் பலன் இருந்ததா, இல்லையா என்பதை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று கூற சிரிப்பலை அடங்க நேரமானது.

நன்றி :http://thillana.wordpress.com/2009/06/30/laboob_sageer/