பயோ ஆல்கே மூலம் பயோடீசல் உற்பத்தி

அப்துல் கலாம் ஆலோசனை

நாம் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கிறோம், மக்கிய எரிபொருள் மூலம் நாம் உற்பத்தி செய்யும் கார்பன்டை ஆக்ஸைடு உலகில் வெப்பமயமாதலை தோற்றுவிக்கிறது, அதனால் ஏற்படும் விளவுகளில் இருந்து நாம் எபபடி இந்த உலகத்தை காப்பது??
தூத்துகுடி பகுதி சூரிய ஒளி எரிசக்தி உற்பத்திக்கு மிகவும் ஏற்ற இடம், இங்கு சூரியஒளி மின்சாரப் பூங்காவும், அத்தோடு கடல் தண்ணீர் மூலமாக டீசாலினேசன், அதாவது கடல் தண்ணீரை சுத்திகரித்து அதன் மூலமாக சுத்தமான குடிதண்ணீரை உற்பத்தி பண்ணி, அதே கடல் தண்ணீரை வைத்து பயோ ஆல்கே உற்பத்தி பண்ணி அதன் மூலம் பயோடீசலை உற்பத்தி பண்ணும் முதல் கேந்திரமாக மாறி ஒரு கார்பன் நீயூட்டரல் காம்ப்லக்ஸாக மாறி, பிலாஸ்டிக் இல்லாத, ஒரு தூய்மையான, வாழ்வு வளம் பெறவேண்டும்.
நன்றி :http://dr.abdulkalam.com/kalam/jsp/display_content.jsp?menuid=28&menuname=Speeches%20/%20Lectures&linkid=68&linkname=Recent&content=1889&columnno=0&starts=0&menu_image=-&contentsForum=Address%20and%20interaction%20with%20the%20Students%20of%20%20UPM%20Matriculation%20School,&titlename=null

10 முதல் 18 பேர் செல்லும் விமானங்களை தயாரிக்க மஹிந்திரா திட்டம்

பெங்களூர்: சுற்றுலா துறைக்கு பயன்படும் வகையில், 10 முதல் 18 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட சிறிய ரக விமானங்களை தயாரிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் மாபெரும் நிறுவனமாக வளர்ந்து வரும் மஹிந்திரா குழுமம், மஹிந்திரா ஏரோஸ்பேஸ் என்ற துணை நிறுவனத்தின் பெயரில் விமான தயாரிப்பிலும் கால் பதித்துள்ளது.

நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரியுடன் இணைந்து 5 பேர் பயணம் செய்யும் வகையில் பிஸ்டன் எஞ்சின் பொருத்தப்பட்ட என்எம்-5 என்ற பெயரில் சிறிய புரோட்டோ டைப் விமானத்தை வடிவமைத்துள்ளது.

இந்த சிறிய ரக விமானம் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து சோதனைஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விமானம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை கருதி, 10 முதல் 18 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட சிறிய விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்விந்த் மெஹ்ரா கூறியதாவது:

" ஆண்டுதோறும் இந்தியாவில் 1.5 கோடி சுற்றுலாப் பயணிகளும், 1.5 கோடி பக்தர்களும் ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் மூலம் சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோயில்களுக்கு செல்கின்றனர்.

ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலாத்துறையில் சிறிய ரக விமானங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, 10 முதல் 18 பேர் வரை பயணம் செய்யும் வசதி கொண்ட விமானங்களை தயாரிக்க உள்ளோம்.

இதற்காக, பெங்களூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள நரசபுரா என்ற இடத்தில் புதிய தொழிற்சாலையை கட்டி வருகிறோம். இன்னும் ஓர் ஆண்டுக்குள் அரசிடமிருந்து சிறிய விமானங்கள் தயாரிப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று கூறினார்.

இந்த நிலையில், சிறிய விமானங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்காக அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தும் முயற்சிகளையும் மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. [
தேங்க்ஸ் TO http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2011/3-mahindra-aerospace-plans-build-10-18-seat-aeroplanes-aid0173.html

இந்திய பெருங்கடலை 'தோண்டும்' சீனா: கவலையோடு வேடிக்கை பார்க்கும் இந்தியா!

இந்தியப் பெருங்கடலில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை (polymetallic sulphide deposits) தோண்டியெடுக்க உள்ளது சீனா. இதனால், இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது.

இந்தியாவை ஒட்டி தென் மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களைத் தேடவும், அதை தோண்டியெடுக்கவும் சீனாவுக்கு சர்வதேச கடல் படுகை ஆணையம் (International Seabed Authority-ISA) அனுமதியளித்துள்ளது. இத் தகவலை சீனாவின் கடல் தாதுக்கள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

1979ம் ஆண்டு கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் விஞ்ஞானிகள் கடல் படுகையை ஆராய்ந்து கொண்டிருந்தபோது மெக்சிகோ அருகே கடலுக்குள் பெரும் மலைகளையும் அதன் மீது சிம்னி போன்ற அமைப்புகளையும் கண்டனர். அந்த சிம்னிகளில் இருந்து சுடுநீர் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பகுதிகளைச் சுற்றி ஏராளமான உலோகத் தாதுக்கள் இருப்பதும் தெரியவந்தது.

அந்தத் தாதுக்களில் தாமிரம் (copper), துத்தநாகம் (zinc), ஈயம் (lead), தங்கம், வெள்ளி ஆகியவை அடங்கும். இவை கடல் நீரில் உள்ள சல்பைடுடன் கலந்து பாலிமெட்டாலிக் சல்பைட்களாக உள்ளன.

இதையடுத்து உலகம் முழுவதுமே இந்த கனிமங்கள் குறித்த ஆர்வமும், அதை தோண்டியடுக்க போட்டியும் ஆரம்பமானது.

இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களை தோண்டியெடுக்க சீனா தீவிரமாக களமிறங்கி, அனுமதியும் பெற்றுவிட்டது. சர்வதேச கடல் படுகை ஆணையத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனா இந்த 10,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதியில் கடலுக்கடியில் கனிமங்களைத் தோண்டலாம்.

மேலும் கிழக்கு பசிபிக் கடலில் 75,000 சதுர கி.மீ. பரப்பளவிலும் கனிமங்களை எடுக்க சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த அனுமதி கிடைத்த கையோடு, பசிபிக் கடலில் தனது ஆழ்கடல் ஆய்வுக் களத்தை இறக்கிவிட்டுவிட்டது சீனா. நேற்று 5,180 மீட்டர் ஆழத்தை எட்டிவிட்ட இந்தக் கலத்தில் 3 ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

இதையடுத்து இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது. கனிம ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை ஒட்டிய பகுதிகளி்ல் சீனாவின் கடற்படை கப்பல்கள் சுற்றி வரும். இந்தப் பகுதியின் கனிமப் படிமங்கள் குறித்த அனைத்து விவரங்களும் சீனா வசம் போகும். மேலும் இந்தப் பகுதியில் நடமாடும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் ரகசிய நடமாட்டத்தையும் சீனாவால் இனி கண்காணிக்க முடியும்.

இது குறித்த தனது கவலையை இந்திய கடற்படையின் உளவுப் பிரிவு (Directorate of Naval Intelligence-DNI) மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நாம் ராணுவ உதவி செய்யாவிட்டால் சீனா போய் உதவி செய்துவிடுமே என்ற கவலை உள்ள மத்திய அரசுக்கு, நமது நாட்டுக்கு அருகிலேயே சீனா கடலைத் தோண்ட ஆரம்பித்துள்ளது குறித்து கவலையில்லை போலிருக்கிறது. இதனால், இந்த விஷயத்தில் இதுவரை மத்திய அரசு வாயே திறக்கவி்ல்லை.
நன்றி http://thatstamil.oneindia.in/editor-speaks/2011/08/china-gains-rights-explore-indian-ocean-aid0090.html